6 3
உலகம்செய்திகள்

ரஷ்ய கப்பலை சுற்றி வளைத்த பிரான்ஸ் வீரர்கள்: உலக அரசியலில் பரபரப்பு

Share

பிரான்ஸ் கடற்படை வீரர்கள், ரஷ்யாவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றை சுற்றி வளைத்த சம்பவம் உலக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

பிரான்சிலுள்ள Saint-Nazaire என்னுமிடத்தின் அருகிலுள்ள கடற்கரையில் புஷ்பா என பெயரிடப்பட்டுள்ள பிரம்மாண்ட கப்பல் ஒன்று பயணித்துள்ளது.

உடனடியாக அதை சுற்றி வளைத்த பிரான்ஸ் கடற்படை வீரர்கள், கப்பலில் ஏறி அதை சோதனையிட்டனர்.

விடயம் என்னவென்றால், கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் எல்லைக்குள் மர்ம ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டவண்ணம் உள்ளன.

கடந்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதிவரை ரஷ்ய கிராமமான Ust-Luga என்னுமிடத்தில் 801 அடி நீள பிரம்மாண்ட எண்ணெய்க்கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர் அது அங்கிருந்து புறப்பட்டு செயின்ட் பீற்றர்ஸ்பர்குக்கு அருகிலுள்ள Primorsk துறைமுகத்தை அடைந்தது. அந்த துறைமுகம் பின்லாந்து வளைகுடாவுக்கு எதிரே உள்ளது.

10 மணி நேரம் அங்கு நின்ற அந்தக் கப்பல், பிறகு போலந்து, ஸ்வீடன் கடற்கரைகள் வழியாக செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி டென்மார்க்கை அடைந்தது.

ஆக, அந்த மர்ம ட்ரோன்களுக்கும் இந்த கப்பலுக்கும் தொடர்பிருக்கலாம். அதாவது, அந்த ட்ரோன்கள் இந்த கப்பலிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி அந்தக் கப்பல் பிரான்ஸ் கடற்பகுதிக்குள் நுழைய, உடனடியாக பிரான்ஸ் கடற்படை வீரர்கள் அந்தக் கப்பலை சுற்றிவளைத்தனர்.

இந்நிலையில், அந்தக் கப்பல் பணியாளர்கள் சட்டப்படி தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அந்தக் கப்பல் பணியாளர்கள் மிக பயங்கர குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால், அவர்கள் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...