6 3
உலகம்செய்திகள்

ரஷ்ய கப்பலை சுற்றி வளைத்த பிரான்ஸ் வீரர்கள்: உலக அரசியலில் பரபரப்பு

Share

பிரான்ஸ் கடற்படை வீரர்கள், ரஷ்யாவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றை சுற்றி வளைத்த சம்பவம் உலக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

பிரான்சிலுள்ள Saint-Nazaire என்னுமிடத்தின் அருகிலுள்ள கடற்கரையில் புஷ்பா என பெயரிடப்பட்டுள்ள பிரம்மாண்ட கப்பல் ஒன்று பயணித்துள்ளது.

உடனடியாக அதை சுற்றி வளைத்த பிரான்ஸ் கடற்படை வீரர்கள், கப்பலில் ஏறி அதை சோதனையிட்டனர்.

விடயம் என்னவென்றால், கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் எல்லைக்குள் மர்ம ட்ரோன்கள் கண்டுபிடிக்கப்பட்டவண்ணம் உள்ளன.

கடந்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 18ஆம் திகதிவரை ரஷ்ய கிராமமான Ust-Luga என்னுமிடத்தில் 801 அடி நீள பிரம்மாண்ட எண்ணெய்க்கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

பின்னர் அது அங்கிருந்து புறப்பட்டு செயின்ட் பீற்றர்ஸ்பர்குக்கு அருகிலுள்ள Primorsk துறைமுகத்தை அடைந்தது. அந்த துறைமுகம் பின்லாந்து வளைகுடாவுக்கு எதிரே உள்ளது.

10 மணி நேரம் அங்கு நின்ற அந்தக் கப்பல், பிறகு போலந்து, ஸ்வீடன் கடற்கரைகள் வழியாக செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி டென்மார்க்கை அடைந்தது.

ஆக, அந்த மர்ம ட்ரோன்களுக்கும் இந்த கப்பலுக்கும் தொடர்பிருக்கலாம். அதாவது, அந்த ட்ரோன்கள் இந்த கப்பலிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி அந்தக் கப்பல் பிரான்ஸ் கடற்பகுதிக்குள் நுழைய, உடனடியாக பிரான்ஸ் கடற்படை வீரர்கள் அந்தக் கப்பலை சுற்றிவளைத்தனர்.

இந்நிலையில், அந்தக் கப்பல் பணியாளர்கள் சட்டப்படி தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அந்தக் கப்பல் பணியாளர்கள் மிக பயங்கர குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால், அவர்கள் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
18 1
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதை பொருள் கடத்தலில் ஜே.வி.பிக்கும் தொடர்பு! அதிர்ச்சி கொடுத்த விமல் வீரவன்ச

தென்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்தொகை போதை பெருட்கள் கடத்தலில் தொடர்புடையவர் என கூறப்படும் சனத் வீரசிங்க...

17 1
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அதிரடி கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது...

16 1
இலங்கைசெய்திகள்

ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா

அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள்....

15 1
இந்தியாசெய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம்! வெளியான தகவல்

கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு...