24 66192d03773b1
உலகம்செய்திகள்

ஈபிள் கோபுரத்தில் ஏறி சாதனை படைத்த இளம் பெண்

Share

ஈபிள் கோபுரத்தில் ஏறி சாதனை படைத்த இளம் பெண்

பிரான்ஸ் நாட்டிலுள்ள தடகள வீராங்கனை ஒருவர் தன் தாய்க்காக பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி சாதனை படைத்துள்ளார்.

அனுக் கார்னியர்(Anouk Garnier) என்னும் 34 வயதுடைய தடகள வீராங்கனை ஒருவரே சாதனை படைத்துள்ளார்.

குறித்த வீராங்கனை கயிறு மூலம் ஈபிள் கோபுரத்தில் 361 அடி, அதாவது 110 மீற்றரை 18 நிமிடங்களில் ஏறி முடித்துள்ளார்.

இதற்கு முன், கயிறு மூலம் உயரமான ஒரு கட்டிடத்தில் ஏறிய பெண் என்னும் சாதனையை ஐடா மாடில்டே ஸ்டீன்ஸ்கார்ட் (Ida Mathilde Steensgaard) என்னும் நெதர்லாந்து பெண் படைத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு அவர் கோபன்ஹேகன் (Copenhagen) ஓபரா இல்லத்தில் 85 அடி, 26 மீற்றர் உயரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது, ஈபிள் கோபுரத்தில் 361 அடி, அதாவது 110 மீற்றர் உயரத்துக்கு கயிறு மூலம் ஏறி அனுக் கார்னியர்(Anouk Garnier) அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் தடகள வீராங்கனையான அனுக் கார்னியர்(Anouk Garnier) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் தாய்க்காகவும், புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆதரவுக்காகவும் இந்த சாதனையை அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...