24 66192d03773b1
உலகம்செய்திகள்

ஈபிள் கோபுரத்தில் ஏறி சாதனை படைத்த இளம் பெண்

Share

ஈபிள் கோபுரத்தில் ஏறி சாதனை படைத்த இளம் பெண்

பிரான்ஸ் நாட்டிலுள்ள தடகள வீராங்கனை ஒருவர் தன் தாய்க்காக பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி சாதனை படைத்துள்ளார்.

அனுக் கார்னியர்(Anouk Garnier) என்னும் 34 வயதுடைய தடகள வீராங்கனை ஒருவரே சாதனை படைத்துள்ளார்.

குறித்த வீராங்கனை கயிறு மூலம் ஈபிள் கோபுரத்தில் 361 அடி, அதாவது 110 மீற்றரை 18 நிமிடங்களில் ஏறி முடித்துள்ளார்.

இதற்கு முன், கயிறு மூலம் உயரமான ஒரு கட்டிடத்தில் ஏறிய பெண் என்னும் சாதனையை ஐடா மாடில்டே ஸ்டீன்ஸ்கார்ட் (Ida Mathilde Steensgaard) என்னும் நெதர்லாந்து பெண் படைத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு அவர் கோபன்ஹேகன் (Copenhagen) ஓபரா இல்லத்தில் 85 அடி, 26 மீற்றர் உயரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது, ஈபிள் கோபுரத்தில் 361 அடி, அதாவது 110 மீற்றர் உயரத்துக்கு கயிறு மூலம் ஏறி அனுக் கார்னியர்(Anouk Garnier) அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் தடகள வீராங்கனையான அனுக் கார்னியர்(Anouk Garnier) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் தாய்க்காகவும், புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆதரவுக்காகவும் இந்த சாதனையை அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...