4 26 scaled
உலகம்செய்திகள்

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.70,000 கோடியை இழக்கவிருக்கும் கனடா

Share

இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு ரூ.70,000 கோடியை இழக்கவிருக்கும் கனடா

கனடா – இந்தியாவுக்கு இடையே இறுக்கமான சூழல் நீடித்துவரும் நிலையில், கனடாவில் தங்கியிருக்கும் மில்லியன் கணக்கான மாணவர்கள் எதிர்காலம் தொடர்பில் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையை அடுத்து, இரு நாடுகளுக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியா தரப்பில் கனடாவுக்கான விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் இந்த கொலை விவகாரத்தில் விசாரணைக்கு தங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என கனடா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கனடாவுக்கான விசா சேவைகளை இந்திய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது தற்போது கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தளை ஏற்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள மொத்த சர்வதேச மாணவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்திய மாணவர்கள். இதன் மூலம் கனடா பெரும் வருவாய் ஈட்டி வருகிறது. மேலும், கனேடிய தனியார் பல்கலைக்கழகங்கள் பல சர்வதேச மாணவர்கள் மூலம் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கின்றன.

இதில் பெரும்பாலான மாணவர்கள் இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள். இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 1.36 லட்சம் மாணவர்கள் கனடாவுக்கு புலம்பெயர்கின்றனர்.

இதனூடாக கனேடிய பொருளாதாரம் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு ரூ.68,000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கு இடம்பெயரும் மொத்த இந்திய மாணவர்களில், 60 சதவீத மாணவர்கள் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள்.

இதுவே, கனடாவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிகமாக புழங்கும் ஒரு நாடாக மாற்றியுள்ளது. கனடாவுக்கான விசா சேவையை இந்தியா இடைநிறுத்தினாலும், இந்திய மாணவர்களுக்கான விசா சேவை தொடரும் என்றே கனடா அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...