1716452376 1682 large
உலகம்செய்திகள்

அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணையை சோதனை செய்த பிரான்ஸ்; ரஷ்யாவுக்கு பதிலடி?

Share

அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணையை சோதனை செய்த பிரான்ஸ்; ரஷ்யாவுக்கு பதிலடி?

முதன்முறையாக, பிரான்ஸ் நாடு, அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது.

சமீபத்தில் ரஷ்யா அணு ஆயுத சோதனை மேற்கொண்ட விடயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது பிரான்ஸ் மேற்கொண்டுள்ள ஒரு சோதனையும் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

முதன்முறையாக பிரான்ஸ் அணு ஆயுதம் ஏந்திச்செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை செய்துள்ளது. ரஃபேல் ஜெட் விமானம் ஒன்று அந்த ஏவுகணையை ஏவியதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான Sebastien Lecornu தெரிவித்துள்ளார்.

ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து பிரான்சும் இந்த சோதனையை நடத்தியுள்ளதால், அது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையா என கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால், உக்ரைனுக்கு போர் வீரர்களை அனுப்புவதற்கு ஆதரவாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கருத்துத் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ரஷ்யா தான் அணு ஆயுத சோதனை நடத்துவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...