பிரான்ஸில் புதிய கலவர அலை உருவாகலாம்! 2400 பேரை அதிரடியாக கைது
உலகம்செய்திகள்

பிரான்ஸில் புதிய கலவர அலை உருவாகலாம்! 2400 பேரை அதிரடியாக கைது

Share

பிரான்ஸில் புதிய கலவர அலை உருவாகலாம்! 2400 பேரை அதிரடியாக கைது

பிரான்ஸில் வெடித்து வரும் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 2,400 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியான நாண்டெர்ரே-வில் நெயில் எம்(Nael m) என்ற 17 வயது சிறுவனை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து பிரான்ஸில் மிகப்பெரிய கலவரம் வெடித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய இந்த கலவரம் 5வது நாள் இரவாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது, கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சிறப்புப் படை காவலர்கள் என 45,000க்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் தடுப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கலவரம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தன்னுடைய ஜேர்மன் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இந்நிலையில் கலவரத்தில் ஈடுபட்ட 2400க்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

200க்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகள் சேதப்படுத்தப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் 12 வணிக வளாகங்கள், 250 புகையிலை கடைகள் மற்றும் 250 வங்கி கிளைகளும் சேதப்படுத்தப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று மாலை முதல் புதிய கலவர அலைகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...