2 10 scaled
உலகம்செய்திகள்

சில புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்ற பிரான்ஸ் திட்டம்

Share

சில புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்ற பிரான்ஸ் திட்டம்

தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருடன் தொடர்பு வைத்துள்ள புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதற்காக மீளாய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன், செசன்ய புலம்பெயர்ந்தோர் ஒருவர் பிரெஞ்சு ஆசிரியர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். அவர் அந்த கொடூரச் செயலைச் செய்யும்போது, அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் காசா போரால் உலகம் பரபரப்படைந்துள்ள இந்த நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரான்சிலிருக்கும் எந்த வெளிநாட்டவர்களுக்கெல்லாம் தீவிரவாதம் தொடர்பான பின்னணி உள்ளது என்று கண்டறிந்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றலாம் என்பது குறித்து மீளாய்வு செய்ய, தனது நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், அந்த ஆசிரியர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஒரு கொலை முயற்சி சம்பவத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.

அந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞர், ஏற்கனவே தீவிரவாத தொடர்பில் பொலிசாரின் கண்காணிப்பில் இருந்துள்ளார்.

அவரும், கைது செய்யப்படும்போது, அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...