உலகம்செய்திகள்

பிரான்ஸில் பொலிஸாரால் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் அடக்கம்

பிரான்ஸில் பொலிஸாரால் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் அடக்கம்
பிரான்ஸில் பொலிஸாரால் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் அடக்கம்
Share

பிரான்ஸில் பொலிஸாரால் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் உடல் அடக்கம்

பிரான்ஸ் நாட்டின் புறநகர் பகுதியான நாண்டெர்ரே-வில் நெயில் எம்(Nael m) என்ற 17 வயது சிறுவன் பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பொலிஸார் தரப்பில் வழங்கிய விளக்கத்தில், போக்குவரத்து விதிகளை மீறியும், பொலிஸாரின் உத்தரவை மீறியும் காரை ஓட்டியதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து பிரான்ஸ் நாடு முழுவதும் கலவரங்கள் 5வது நாள் இரவாக நடைபெறு வருகிறது.

மொத்தம் 45,000 பொலிஸார்கள் வரை கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் இதில் 2000 கலவரக்காரர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளனர், நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸாரால் சுடப்பட்டு உயிரிழந்த 17 வயது சிறுவன் நெயில் எம்(Nael m) உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

நாண்டெர்ரே நகரில் உள்ள இஸ்லாமிய மசூதியில் உடல் வைக்கப்பட்டு தொழுகைகள் நடத்தப்பட்ட பின்னர் அதே பகுதியில் உள்ள மலை உச்சியில் உள்ள கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதற்கு முன்னதாக சிறுவனின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கண்ணீருடன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...