GettyImages 618910604 scaled
உலகம்செய்திகள்

விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான ஒலிம்பிக் நட்சத்திரம்

Share

விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியான ஒலிம்பிக் நட்சத்திரம்

ஒன்ராறியோவில் 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி முன்னாள் ஒலிம்பிக் நட்சத்திரம் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த இந்த சம்பவம் தொடர்பில் ஸ்கேட் கனடா நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளது. சாலை விபத்தானது ஒன்ராறியோவின் ஷெல்பர்னின் வடக்கே நடந்துள்ளது.

சம்பவத்தின் போது 31 வயதான அலெக்ஸாண்ட்ரா பால் தமது பிள்ளையுடன் பயணப்பட்டுள்ளார். அப்போது லொறி ஒன்று தவறான பாதையில் புகுந்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது வரிசையாக மோதியுள்ளது.

இதில் அலெக்ஸாண்ட்ரா பால் சம்பவயிடத்திலேயே காயங்கள் காரணமாக மரணமடைந்துள்ளார். அவரது குழந்தை காயங்களுடன் மீட்கப்பட்டு சிறார்களுக்கான மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலெக்ஸாண்ட்ரா பால் மற்றும் அவரது இணையும் கணவருமான மிட்செல் இஸ்லாம் உடன் 2014 ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.

பல சர்வதேச பதக்கங்களை இந்த இணை வென்றது. மட்டுமின்றி, மூன்று கனடிய சாம்பியன்ஷிப் பதக்கங்களையும் வென்றுள்ளது. 2016ல் ஸ்கேட்டிங் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து அலெக்ஸாண்ட்ரா பால் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...