முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு (Nicolas Sarkozy) விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபர் இவரே என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லிபியத் தலைவர் கேணல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களைச் சட்டவிரோத நிதியாகப் பெற சதி செய்ததற்காக, முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதிக்குச் சமீபத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரசாரத்திற்கு கடாபியிடமிருந்து நிதியைப் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.