பல நாடுகளில் ஆபத்தில்!! ரஷ்யாவுக்கு ஜெலென்ஸ்கி கண்டனம்
உலகம்செய்திகள்

பல நாடுகளில் ஆபத்தில்!! ரஷ்யாவுக்கு ஜெலென்ஸ்கி கண்டனம்

Share

பல நாடுகளில் ஆபத்தில்!! ரஷ்யாவுக்கு ஜெலென்ஸ்கி கண்டனம்

ரஷ்யாவின் செயலால் உலகம் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கை தொடங்கிய பிறகு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கி மேற்கொண்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு உக்ரைன் ரஷ்யா இடையே சமரசம் ஏற்படுத்தப்பட்டு கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்த ஒப்பந்தம் நேற்றுடன் காலாவதியான நிலையில், தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தத்தை ரஷ்யா புதுப்பிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது, இதனை தொடர்ந்து ரஷ்யாவின் முடிவுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

கண்டனம் தெரிவித்து ஜெலென்ஸ்கி வெளியிட்ட தனது அறிக்கையில், உக்ரைனின் தானியங்களை நம்பி எகிப்து, சூடான், ஏமன், வங்கதேசம், இந்தோனேசியா, துருக்கி, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளை சேர்ந்த 40 கோடி மக்கள் உள்ளன.

உணவு தானிய விநியோகத்தை தடுக்க ரஷ்யாவிற்கு எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை, ரஷ்யாவின் இந்த மிரட்டலுக்கு உலக நாடுகள் நிச்சயம் அடிபணிய கூடாது.

எதேச்சதிகாரமான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிராக துணிச்சலான அனைத்து நடவடிக்கைகளையும் உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தங்களுக்கான உணவு விநியோகத்தை தடையின்றி கோர முழு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை தொடர பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகி இருக்கும் நிலையில், உக்ரைனில் இருந்து தானியங்களை எடுத்து வரும் பணியில் எந்த கப்பல் நிறுவனங்களும் பங்கேற்காது.

எனவே பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமான முடிவு ஏட்டப்படுவதே ஒரே வழி என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....