அமெரிக்காவில் பறக்கும் கார்
உலகம்செய்திகள்

உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் பறக்கும் கார்

Share

அமெரிக்காவில் பறக்கும் கார்!

உலகத்திலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உள்ள சாலைகளில் பறக்கும் காருக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனம் பறக்கும் காரை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) யிடம் சட்டப்பூர்வ அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தது.

தற்போது அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் கார், பயணிகள் போக்குவரத்திற்காக அமெரிக்க அரசிடமிருந்து சட்டப்பூர்வ அனுமதியைப் பெற்றுள்ளது. உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சான்றிதழ் பெற்ற முதல் பறக்கும் கார் இதுவாகும்.

இந்த பறக்கும் கார் மின்சாரத்தில் பறக்கக்கூடியது. இக்காரின் விலை $300,000 ஆகும். இந்த பறக்கும் காரில் 2 பயணம் செய்யலாம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்ட இடங்களில் நெரிசல் ஏற்பட்டாலோ இக்காரால் பறக்க முடியும்.

வரும் 2025ம் ஆண்டு இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு பறக்கும் கார்களை வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், இக்கார் சாதாரண சாலையில் மணிக்கு 25 மைல்களுக்கு மேல் செல்லாது. இந்த பறக்கும் கார் குறைந்த வேகம் கொண்டது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது....

images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன்...