24 662737e214e8e
உலகம்செய்திகள்

சீனாவில் பாரிய வெள்ளம் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Share

சீனாவில் பாரிய வெள்ளம் : ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

சீனாவில் (China) பல நாட்களாக பெய்த கனமழையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக 110,000 மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா – குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் அதன் பெரும் நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக, இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், வெள்ளத்தில் மூழ்கிய மக்கள் பாதுகாப்பிற்காக படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

குவாங்டாங்கின் பெரும்பகுதி டெல்டா (Delta) நதியின் ஒரு பகுதி என்பதால் இது கடல் மட்ட உயர்வு மற்றும் புயல் அலைகள் காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையிலேயே, ஏறத்தாழ 110,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் சுமார் 25,800 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பகுதி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில பாடசாலைகளை மூடுவதற்கும் சீன அரசினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...