14 13
உலகம்செய்திகள்

ஸ்டார்மரின் வீட்டில் திடீரென தீப்பரவல்.. தீவிர விசாரணையில் லண்டன் பொலிஸார்

Share

லண்டன் வடக்கு பகுதியில் உள்ள பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் லண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞாயிறு அதிகாலை 1:35 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட அவசர சேவைகளை பிரதமர் ஸ்டார்மர் நன்றி தெரிவிக்கின்றார்.

இது ஒரு உயிரின் பாதுகாப்பு தொடர்பான விசாரணையாக இருப்பதால் மேலதிகமாக எதுவும் தெரிவிக்க முடியாது” எனக் கூறப்பட்டுள்ளது.

பொலிஸார் விடுத்த செய்திக்குறிப்பில், ஞாயிறு அதிகாலை 1:35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வீட்டின் நுழைவாயில் பகுதிக்கு சேதம் ஏற்பட்டதாகவும், எந்த உயிரிழப்பும் இல்லையெனவும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.

அதேவேளை, தீக்கான காரணம் இது வரை வெளியிடப்படாத நிலையில் தற்போது அந்த வீட்டு அருகிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...