11 33
உலகம்செய்திகள்

குறைந்த செலவில் விசா வசதி கொண்ட உலகின் மிக மகிழ்ச்சியான நாடு

Share

குறைந்த செலவிலான விசா வசதி கொண்ட உலகின் மிக மகிழ்ச்சியான நாடு குறித்து இங்கே பார்க்கலாம்.

தொலைதூர வேலை (Remote Working) செய்வதன் மூலம் உலகம் முழுவதும் பயணிக்க முடியும் நிலையில், குறைந்த செலவிலான மற்றும் வசதியான இடத்தை தேர்வு செய்வது சவாலாக மாறியுள்ளது.

ஐரோப்பாவில் பல நாடுகள் டிஜிட்டல் நோமாட் (Digital Nomad) விசா வழங்கினாலும், அவற்றின் செலவு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, போர்ச்சுகல், எஸ்டோனியா, கிரோஷியா போன்ற நாடுகளில் விசா பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது.

ஆனால், “ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு” என்று அழைக்கப்படும் பின்லாந்து இதற்கு வித்தியாசமாக, குறைந்த வருவாய் தேவையுடன் விசா வழங்குகிறது.

€1,220 மாத வருமானம் இருந்தால், சுயதொழில் (Self-employment) விசா மூலம் பின்லாந்தில் வேலை செய்யலாம்.

இந்த விசா 6 மாதங்கள் வரை செல்லுபடியாகும், மேலும் ஒரு ஆண்டுக்கு புதுப்பிக்க வாய்ப்பு உள்ளது.

இதன் மூலம் Freelancer-கள், ஆலோசகர்கள், தொழில்முனைவோர்கள் பின்லாந்தில் வசிக்கவும் வேலை செய்யவும் முடியும்.

பின்லாந்து உலகில் மிகவும் பாதுகாப்பான நாடாக (14வது இடம்) கருதப்படுகிறது. இது 10 ஆண்டுகளாக உலகின் மகிழ்ச்சியான நாடாக தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Helsinki, Oulu, Turku போன்ற நகரங்கள் டிஜிட்டல் நோமாட்களுக்கு சிறந்த இடங்களாகும்.

விசா செலவு:

ஓன்லைன் விண்ணப்பம் – €400 (£331)

காகித விண்ணப்பம் – €496 (£400)

குறைந்த செலவில் உயர் வாழ்க்கைத்தரம் வேண்டும் என்றால், பின்லாந்து உங்கள் சிறந்த தேர்வாக இருக்கலாம்.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...