2 14 scaled
உலகம்செய்திகள்

கோடி கோடியாக குவித்துள்ள ஹமாஸ் படைகள்… நீண்ட கால போருக்கு அஞ்சாது: வெளியான பின்னணி

Share

கோடி கோடியாக குவித்துள்ள ஹமாஸ் படைகள்… நீண்ட கால போருக்கு அஞ்சாது: வெளியான பின்னணி

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படைகள் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதால், இஸ்ரேல் அறிவித்துள்ள நீண்ட கால போருக்கும் அவர்கள் அஞ்சப்போவதில்லை என்றே கூறப்படுகிறது.

ஹமாஸ் படைகளின் அக்டோபர் தாக்குதலுக்கு பின்னர், இஸ்ரேல் இதுவரை பாலஸ்தீன மக்கள் 19,000 பேர்களை வான் தாக்குதல் மற்றும் குண்டுவீச்சால் கொன்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறார்கள் என்றே அஞ்சப்படுகிறது.

ஆனால் ஹமாஸ் படைகளை அதன் பொருளாதார பின்னணியை சிதைக்காமல் ஒழிக்க முடியாது என்பதை இஸ்ரேல் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே நிபுணர்கள் பலர் குறிப்பிடுகின்றனர்.

கனேடிய நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், ஹமாஸ் படைகள் பொருளாதார ரீதியாக வலுவான நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் தேவைக்கும் அதிகமான நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்துள்ளனர்.

பல நாடுகளில் முதலீடுகள் செய்துள்ளதுடன் தடைபடாத வருவாய் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார். குறிப்பாக துருக்கி, சூடான் மற்றும் அல்ஜீரியா நாடுகளில் சிறு, குறு நிறுவனங்கலிலும் கட்டுமான நிறுவனங்களிலும் ஹமாஸ் படைகள் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அக்டோபர் தாக்குதலுக்கு பின்னர் ஹமாஸ் படைகளுக்கு நிதியுதவி அளிப்போரின் எண்ணிக்கை ஒன்றும் குறைந்துவிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஹமாஸ் படைகளுக்கு ஈரான் நிதியுதவி அளித்து வருகிறது.

ஆண்டுக்கு 70 முதல் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் பல்வேறு கட்டங்களாக அனுப்பி வருகிறது. மேலும், ஹமாஸ் படைகள் ஆட்சி நடத்தும் காஸா பகுதியின் 2.5 பில்லியன் டொலர் பட்ஜெட்டில், 1.1 பில்லியன் டொலர் தொகையை பாலஸ்தீன நிர்வாகம் அளித்து வருகிறது.

மட்டுமின்றி, மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற அரசு ஊழியர்களின் சம்பளத்தை கட்டார் செலுத்தி வருகிறது. மேலும் பிராந்தியத்தின் 100,000 ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதத்திற்கு 100 டொலர் தொகையை நிவாரணமாக வழங்குகிறது.

ஆனால் ஹமாஸ் படைகளுக்கு நிதியுதவி அளிப்பதை கட்டார் மறுத்து வருகிறது. மட்டுமின்றி, 2021ல் அமெரிக்கா ஆதரவுடன், காஸா பகுதிக்கு ஆண்டுக்கு 360 மில்லியன் டொலர் நிதியுதவி அளிக்க கட்டார் உறுதி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...