22 3
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவில் கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share

இந்தியாவில் கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில், கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்திய இளம்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் – விசாகப்பட்டினம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயதுடைய இளம்பெண்ணொருவரின் வயிற்றிலிருந்தே குழந்தையின் எலும்புகள் அகற்றப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.

எனினும், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதனால் மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பாத அந்த பெண் கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அந்த பெண் உட்கொண்ட கருக்கலைப்பு மாத்திரையால் பாதி அளவிலேயே கரு கலைந்ததுள்ளது.

இதனால் கடந்த மூன்று வருடங்களாக அந்த பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து, விசாகப்பட்டினத்தில் உள்ள அரச மருத்துவமனையில் கடந்த வாரம் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புகளை அகற்றியுள்ளதுடன் தற்போது அந்த இளம் பெண் நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...