22 3
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தியாவில் கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Share

இந்தியாவில் கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில், கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்திய இளம்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் – விசாகப்பட்டினம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயதுடைய இளம்பெண்ணொருவரின் வயிற்றிலிருந்தே குழந்தையின் எலும்புகள் அகற்றப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.

எனினும், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதனால் மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பாத அந்த பெண் கருக்கலைப்பு மாத்திரையை வாங்கி உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அந்த பெண் உட்கொண்ட கருக்கலைப்பு மாத்திரையால் பாதி அளவிலேயே கரு கலைந்ததுள்ளது.

இதனால் கடந்த மூன்று வருடங்களாக அந்த பெண் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து, விசாகப்பட்டினத்தில் உள்ள அரச மருத்துவமனையில் கடந்த வாரம் ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் குழந்தையின் எலும்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இளம் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புகளை அகற்றியுள்ளதுடன் தற்போது அந்த இளம் பெண் நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...