உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அகதி ஒருவரை காலால் மிதித்து தரதரவென இழுத்துச் சென்ற பெண் பொலிசார்

Share
5 2 scaled
Share

பிரித்தானியாவில் அகதி ஒருவரை காலால் மிதித்து தரதரவென இழுத்துச் சென்ற பெண் பொலிசார்

இங்கிலாந்தில், கட்டிடம் ஒன்றின் அருகில் படுத்திருந்த அகதி ஒருவரை, பெண் பொலிசார் ஒருவர் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இங்கிலாந்தில், கட்டிடம் ஒன்றின் அருகே அகதி ஒருவர் படுத்திருக்க, பெண் பொலிசார் ஒருவர், அவரை தரதரவென இழுத்துச் சென்றதுடன், அவரது வயிற்றிலும் மிதித்துள்ளார்.

பொலிசார் தாக்கியதில் காயமடைந்த அந்த 31 வயது நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தனக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரில் இரத்தம் கலந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சூடான் நாட்டவரான அந்த நபருக்கு பிரித்தானியாவில் தங்கியிருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சாலையோரமாகத் தூங்கும் தன் போன்றவர்களை கவுன்சில் அலுவலர்கள் வந்து எழுப்பிவிடுவது வழக்கம்தான் என்று கூறும் அவர், ஆனால், இதுவரை தனக்கு இப்படி ஒரு விடயம் நடந்ததில்லை என்கிறார்.

சம்பந்தப்பட்ட பொலிசார் நடந்துகொண்ட விதம் சரியானதல்ல என்று கூறியுள்ள பொலிஸ் அதிகாரிகள், அது குறித்து அந்த பெண் பொலிசாரிடம் தனிப்பட்ட முறையில் விவாதிக்கப்பட்டதாகவும், இனி அதுபோல நடக்கக்கூடாதென அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்வது என்பது குறித்து அவருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், வேறொரு நாட்டிலிருந்து அகதியாக வந்து, வீடில்லாமல் சாலையோரமாக படுத்துக்கிடந்த ஒருவரைத் தாக்கியதற்காக அந்த பெண் பொலிசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, பொலிஸ் அதிகாரிகளிடம் பதிலில்லை!

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...