5 2 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அகதி ஒருவரை காலால் மிதித்து தரதரவென இழுத்துச் சென்ற பெண் பொலிசார்

Share

பிரித்தானியாவில் அகதி ஒருவரை காலால் மிதித்து தரதரவென இழுத்துச் சென்ற பெண் பொலிசார்

இங்கிலாந்தில், கட்டிடம் ஒன்றின் அருகில் படுத்திருந்த அகதி ஒருவரை, பெண் பொலிசார் ஒருவர் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இங்கிலாந்தில், கட்டிடம் ஒன்றின் அருகே அகதி ஒருவர் படுத்திருக்க, பெண் பொலிசார் ஒருவர், அவரை தரதரவென இழுத்துச் சென்றதுடன், அவரது வயிற்றிலும் மிதித்துள்ளார்.

பொலிசார் தாக்கியதில் காயமடைந்த அந்த 31 வயது நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தனக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரில் இரத்தம் கலந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சூடான் நாட்டவரான அந்த நபருக்கு பிரித்தானியாவில் தங்கியிருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சாலையோரமாகத் தூங்கும் தன் போன்றவர்களை கவுன்சில் அலுவலர்கள் வந்து எழுப்பிவிடுவது வழக்கம்தான் என்று கூறும் அவர், ஆனால், இதுவரை தனக்கு இப்படி ஒரு விடயம் நடந்ததில்லை என்கிறார்.

சம்பந்தப்பட்ட பொலிசார் நடந்துகொண்ட விதம் சரியானதல்ல என்று கூறியுள்ள பொலிஸ் அதிகாரிகள், அது குறித்து அந்த பெண் பொலிசாரிடம் தனிப்பட்ட முறையில் விவாதிக்கப்பட்டதாகவும், இனி அதுபோல நடக்கக்கூடாதென அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்வது என்பது குறித்து அவருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், வேறொரு நாட்டிலிருந்து அகதியாக வந்து, வீடில்லாமல் சாலையோரமாக படுத்துக்கிடந்த ஒருவரைத் தாக்கியதற்காக அந்த பெண் பொலிசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, பொலிஸ் அதிகாரிகளிடம் பதிலில்லை!

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...