உலகம்செய்திகள்

மாஸ்கோ தாக்குதல்…. 4,000 உக்ரைன் கைதிகளின் உயிர் ஊசல்

24 6603b89ee80e6
Share

மாஸ்கோ தாக்குதல்…. 4,000 உக்ரைன் கைதிகளின் உயிர் ஊசல்

மாஸ்கோ மீதான ஐ.எஸ் தாக்குதலை திசை திருப்பி, ரஷ்ய சிறையிலிருக்கும் உக்ரைன் கைதிகள் 4,000 பேர்களுக்கு விளாடிமிர் புடின் மரண தண்டனை விதிக்கலாம் என நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யா தரப்பில் வாதிட்டு வரும் நிலையிலேயே 4,000 கைதிகளின் உயிர் ஊசலில் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நெருக்கடியான நிலையை பயன்படுத்தி விளாடிமிர் புடின் மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவரலாம் என்றும், உக்ரைன் கைதிகளுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கவலை எழுந்துள்ளது.

இதனிடையே ரஷ்ய நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், மாஸ்கோ தாக்குதலானது முழுமையான ஐ.எஸ் தாக்குதல் போன்று இல்லை என்றும், இது ரஷ்யாவுக்குள் திட்டமிடப்பட்ட தாக்குதலாகவே தென்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கொலைவெறித் தாக்குதல் ரஷ்ய ஜனாதிபதியை மோசமான முடிவெடுக்கவும் தூண்டலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, மரண தண்டனையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவரும் பொருட்டு, ரஷ்ய அரசாங்கமே இந்த தாக்குதலை ரகசியமாக முன்னெடுத்திருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவந்தால், உக்ரைன் மொற்றொரு மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 4,000 உக்ரைன் கைதிகள் ரஷ்யாவில் சிறையில் உள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் பொருட்டும், மாஸ்கோ தாக்குதலை அனுமதித்திருக்கலாம் என நிபுணர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்படுகிறது.

இதன் பொருட்டே, விளாடிமிர் புடினின் நெருங்கிய வட்டாரத்தில் பலரும் தற்போது மரண தண்டனை தொடர்பில் கருத்து தெரிவித்து வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...