24 65ff5c24c5647
உலகம்செய்திகள்

புடின் மாஸ்கோ தாக்குதலை எங்கள் மீது பழிபோட முயல்கிறார்! ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

Share

புடின் மாஸ்கோ தாக்குதலை எங்கள் மீது பழிபோட முயல்கிறார்! ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கீவ் மீது பழிசுமத்த புடின் முயல்வதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் 4 துப்பாக்கி ஏந்திய நபர்கள் உக்ரைன் நோக்கிப் பயணம் செய்வதாக தனது உரையில் குறிப்பிட்டார்.

உக்ரைனுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா சண்டையிட்டு வரும் நிலையில் புடின் இதனை கூறியுள்ளார்.

இந்த நிலையில் புடினின் கூற்றை நிராகரித்து, அவர் மீது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”நேற்று மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது: புடினும் மற்றவர்களும் வேறு யாரோ ஒருவர் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள். அவர்கள் எப்போதும் ஒரே முறைகளைக் கொண்டுள்ளனர்.

புடின் தனது ரஷ்ய குடிமக்களுடன் பழகுவதற்கு பதிலாக, அவர்களிடம் உரையாற்றுவதற்கு பதிலாக, ஒரு நாள் அமைதியாக இருந்தார். அதை உக்ரைனுக்கு எவ்வாறு கொண்டு வருவது என்று யோசித்தார். எல்லாம் முற்றிலும் கணிக்கக்கூடியது” என தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடந்த இந்தத் தாக்குதல், ரஷ்யாவில் ஏறக்குறைய 2 தசாப்தங்களாக நடந்த மிக மோசமான தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் ஐ.எஸ் குழு ஒன்று பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...