tamilni 400 scaled
உலகம்செய்திகள்

10,000 டொலர்கள் வெகுமதியை அறிவித்த FBI: யார் இந்த மாணவி?

Share

10,000 டொலர்கள் வெகுமதியை அறிவித்த FBI: யார் இந்த மாணவி?

நியூ செர்ஜி பகுதியில் காணாமல் போன இந்திய பெண் மாணவி மயூஷி பகத்(Mayushi Bhagat) குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 10,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என FBI தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூ செர்ஜி பகுதியில் 29 வயது இந்திய பெண் மாணவி மயூஷி பகத் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நிலையில், அவர் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு சுமார் $ 10,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என FBI தற்போது தெரிவித்துள்ளது.

இந்திய பெண் மாணவி மயூஷி பகத் 2019ம் ஆண்டு ஏப்ரல் 29ம் திகதி அமெரிக்காவின் நியூ செர்ஜி நகரத்தில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இறுதியாக பார்க்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு மே 1ம் திகதி இந்திய பெண் மாணவி மயூஷி பகத்தை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

1994ம் ஆண்டு இந்தியாவில் பிறந்த மயூஷி பகத், கடந்த 2016ம் ஆண்டு F1 ரக மாணவர் விசாவில் அமெரிக்காவிற்கு வந்துள்ளார்.

நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-யில் கல்வி பயின்று வந்த மயூஷி பகத்திற்கு ஆங்கிலம், ஹிந்தி, உருது, ஆகிய மொழிகள் தெரியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருமையான முடி, காபி நிற கண்கள், கொண்ட மயூஷி பகத் 5 அடி 10 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், அவர் காணாமல் போன போது கருப்பு நிற டி-ஷர்ட்டும், பல வண்ணங்கள் கொண்ட பைஜாமா பேன்ட் அணிந்து இருந்தார் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்திய பெண் மாணவி மயூஷி பகத் காணாமல் போய் 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் அவர் குறித்த ஒரு தகவலும் தெரிய வராத நிலையில், பொதுமக்களின் உதவியை FBI மற்றும் ஜெர்சி நகர பொலிஸார் நாடியுள்ளனர்.

மயூஷி பகத் இருப்பிடம் குறித்தோ அல்லது அவரை மீட்டோ தருபவர்களுக்கு சுமார் $ 10,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என FBI தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...