1 26
உலகம்செய்திகள்

2024ஆம் ஆண்டில் துரித வளர்ச்சி காணும் பிரித்தானிய பொருளாதாரம்

Share

2024ஆம் ஆண்டில் துரித வளர்ச்சி காணும் பிரித்தானிய பொருளாதாரம்

G7 நாடுகளில் கடந்த 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மந்தநிலைக்குள் விழுந்த பிரித்தானியாவின் பொருளாதாரம் 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் வேகமாக வளர்ந்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார வல்லுநர்களின் கணிப்புகளுக்கு ஏற்ப, இந்த வருடம் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 0.6 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரித்தானியா மந்தநிலைக்குள் விழுந்த நிலையில், 2024ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில், 1.3 சதவீதம் வளர்ச்சியை ஈட்டியுள்ளது.

இது பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மற்றும் சான்செலர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) ஆகியோருக்கு ஒரு ஊக்கத்தை வழங்கும் என்றும் முக்கியமாக வளர்ச்சியை முன்னுரிமையாக கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு இது உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

எனினும், இந்த வளர்ச்சி வருடத்தின் இரண்டாம் பாதியில் தொடராது என்று எச்சரிக்கப்படுகிறது.

ஊழல், இக்கட்டான பொருளாதார சூழ்நிலை மற்றும் பிற காரணங்களால் இங்கிலாந்து வங்கி (Bank Of England) வட்டி விகிதத்தை குறைப்பதில் தாமதிக்க வாய்ப்பு உள்ளமையினால் 2024ஆம் ஆண்டின் முழு வளர்ச்சியை 1.1 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இதன் பின்னணியில், முதலீடுகள் குறைவாக உள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரத்தில் அதிக மாற்றங்கள் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இந்த வளர்ச்சி நிலையை ஆளும் கட்சி தங்கள் சாத்தியத்தை நிரூபிக்க முயற்சிக்கிறது, ஆனால் மக்கள் நலன் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க அரசு சுய முதலீடுகளை செய்ய வேண்டியிருக்கும் என தெரிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
11 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கண்டி நீதிமன்ற வளாகம்: ஐந்து மாதங்களில் மீள்நிர்மாணப் பணிகள் நிறைவு!

டித்வா (Ditwah) புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பலத்த சேதமடைந்த கண்டி நீதிமன்ற...

10 12
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை முன்வைக்க நீதிமன்று உத்தரவு!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும்,...

09 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிட்டபெத்தர பகுதியில் இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு!

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு...

08 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனித புதைகுழி: ஏப்ரல் 20-ல் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் செம்மணி மனித புதைகுழி வழக்கு, நேற்று (12) யாழ்ப்பாண நீதவான்...