4 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் பிடியில் ஒரு நொடி கூட தூங்கவில்லை… தாயகம் திரும்பிய 17 பேர் கண்ணீர் தகவல்

Share

ஹமாஸ் பிடியில் ஒரு நொடி கூட தூங்கவில்லை… தாயகம் திரும்பிய 17 பேர் கண்ணீர் தகவல்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக விடுதலையானவர்களில் 17 தாய்லாந்து நாட்டவர்களும் தற்போது தாயகம் திரும்பியுள்ளனர்.

கத்தார் மற்றும் எகிப்து தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக 182 பாலஸ்தீன மக்களும் 81 பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

இதில் விடுதலையான 17 தாய்லாந்து நாட்டவர்கள் தற்போது தாயகம் திரும்பியுள்ளனர். அக்டோபர் 7ம் திகதி போர் தொடங்கும் முன்னர் வரையில் இஸ்ரேலில் 30,000 தாய்லாந்து நாட்டவர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

மட்டுமின்றி, குறித்த போரில் 39 தாய்லாந்து நாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போரில் சிக்கி கொல்லப்பட்ட அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்களும் தாய்லாந்து நாட்டவர்களே என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட 17 பேர்களும் பாங்காக்கில் வந்திறங்கியதும், போரில் கொல்லப்பட்ட 39 பேர்களுக்காக அதிகாரிகளுடன் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்புடைய 17 பேர்களையும் வரவேற்க குடும்ப உறுப்பினர்கல் பலர் பாங்காக் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். ஹமாஸ் படைகளால் மொத்தம் 23 தாய்லாந்து பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் மேலும் ஒன்பது பேர் இன்னும் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஹமாஸ் பிடியில் சிக்கிய ஒரே ஒரு பெண், பாங்காக் விமான நிலையத்தில் கண் கலங்கியதுடன், அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஹமாஸ் பிடியில் சிக்கியிருந்த 50 நாட்களும் நரகமாக இருந்தது என்றும், ஒரு நொடி கூட தூங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். போதிய உணவின்றி, பலரும் உடல் எடை குறைந்து காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Canned Fish 1200px 22 11 06 1000x600 1
செய்திகள்இலங்கை

டின் மீன் வகைகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை...

AA1QtdSx
செய்திகள்உலகம்

தென் கொரியா சியோனானில் பாரிய தீ விபத்து: இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு 129 தீயணைப்பு வீரர்கள் முயற்சி!

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1 1
செய்திகள்இலங்கை

விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் நடந்த மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என...

fc8354edbbb9260d3534c77dcb0e01de 1200
செய்திகள்உலகம்

வெளிநாட்டு மாணவர் கட்டணத்தில் 6% புதிய வரி:  பிரித்தானியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அதிருப்தி!

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது பிரித்தானிய அரசாங்கத்தால் விதிக்கப்படவுள்ள புதிய வரித் திட்டம் குறித்து,...