உலகம்செய்திகள்

கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக எம்.எல்.ஏ

Share
கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக எம்.எல்.ஏ
கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக எம்.எல்.ஏ
Share

கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக எம்.எல்.ஏ

கொடியேற்றும் போது, தேசியக்கொடி கீழே அறுந்து விழுந்ததால் அருகில் உள்ளவரை அடிக்க கை ஓங்கிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

75 -வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையிலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலும் தேசியக்கொடி ஏற்றினர்.

மேலும், தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமையில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்து கொண்டார்.

அங்கு, கும்பகோணம் 8-வது பட்டாலியன் என்சிசி கமாண்டிங் ஆபிசர் கர்னல் எஸ்.சந்திரசேகரன் மற்றும் திமுக எம்.எல்.ஏ இருவரும் இணைந்து கொடி ஏற்ற முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தேசியக்கொடி அறுந்து விழுந்தது.

இதனைத்தொடர்ந்து, தேசியக்கொடி அறுந்து விழுந்ததால் அருகில் உள்ளவரை பார்த்து திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் கை ஓங்கினார்.

இதனால் அருகில் இருந்தவர்கள் தேசியக்கொடியை மீண்டும் கயிற்றில் கட்டி ஏற்றினர். தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...