5 4
உலகம்செய்திகள்

சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

Share

சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய தகவல்

சவுதி அரேபியாவில் குடும்பத்துடன் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் குழந்தைகள் ஆறு வயது நிறைவடைந்தவுடன் அவர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்வது கட்டாயம் என தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் (Saudi Arabia) பொது குடிவரவு அதிகாரம் (Jawazat) இன்று(2) அதிகாரப்பூர்வ X கணக்கில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக exit அல்லது re-entry visa பெற, இந்த பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Absher என்ற இணையதளத்தினூடாக சென்று புதிய கணக்கொன்றை உருவாக்கி பதிவு செய்தன் பின்னர், குறித்த அலுவலகத்திற்கு செல்லவும்.

உறுதிப்படுத்தப்பட்ட நேரத்தின் அச்சுப் பிரதியோ அல்லது ஸ்க்ரீன்ஷாட்டோடு கடவுச்சீட்டு மற்றும் இகாமாவையும் (புதிய அடையாள அட்டை) கொண்டு செல்லவும்.

குழந்தையின் பயோமெட்ரிக்ஸ் பூர்த்தி செய்ய வேண்டுமென அதிகாரியிடம் தெரிவித்தால், அவர்கள் தனிப்பட்ட விவரங்களுடன் ஒரு படிவத்தை நிரப்பச் செய்ததன் பின்னர் விரல் ரேகைகளை ஸ்கேன் செய்வார்கள்.

பின்னர், குழந்தையின் விரல் ரேகைகளை ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, ஜவாசட் மற்றும் உள்துறை அமைச்சின் (MOI) முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த நிகழ்நிலையில் அதனை சரிப்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...