R 13 scaled
உலகம்செய்திகள்

நிபந்தனைக்கு பணிந்த முன்னாள் மேயர்..சிறையிலிருந்து விடுவித்த ரஷ்யா

Share

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மேயர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால் கைதான குற்றவாளிகளை ரஷ்யா போரில் ஈடுபடுத்தி வருகிறது.

அவர்களில் பலருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி, உக்ரைனுக்கு எதிராக சண்டையிட ரஷ்யா அனுப்பி வைக்கிறது.

இதற்கிடையில், ரஷ்யாவின் Vladivostok நகர முன்னாள் மேயரான Oleg Gumenyuk லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் கடந்த ஆண்டு சுமார் 4,32,000 டொலர்கள் லஞ்சம் பெற்றதால், அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், Oleg Gumenyuk உக்ரைனில் சண்டையிட ஒப்புக்கொண்டதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவரது வழக்கறிஞர் ரஷ்ய செய்தி நிறுவனமான Kommersant தெரிவித்தார்.

Oleg Gumenyuk ரஷ்யாவின் இராணுவத்துடன் சண்டையிடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் கிழக்கு நகரமான Vladivostok நகரின் மேயராக 2018 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் Oleg Gumenyuk பணியாற்றினார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...