tamilni 263 scaled
உலகம்செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை: ஆப்பிரிக்க நாடொன்றின் அறிவிப்பு

Share

சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை: ஆப்பிரிக்க நாடொன்றின் அறிவிப்பு

உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் நாட்டிற்குள் நுழைய விசா தேவையில்லை என கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து கென்யா சுதந்திரமடைந்த 60 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வில் நைரோபியில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

பயண நடைமுறைகளை எளிதாக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா இல்லாமல் மின்னணு பயண அங்கீகாரம் “electronic travel authorization” இருந்தால் கென்யாவிற்கு செல்லலாம் எனவும் உலகெங்கிலும் உள்ள பயணிகள் கென்யாவுக்குச் செல்ல விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம் காங்கோ குடியரசில் நடந்த ஒரு மாநாட்டில் விசா விலக்குகளுக்கான தனது திட்டங்களை ஜனாதிபதி ரூட்டோ முன்னர் கோடிட்டுக் காட்டியிருந்தார்

இதன்படி ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்கள் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விசா இல்லாமல் கென்யாவுக்குச் செல்ல முடியும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கை ஒரு பரந்த முயற்சியை பிரதிபலிப்பதோடு பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தவும், ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே உறவுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

கென்யா, அதன் மாறுபட்ட நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற நாடாகும்.

சர்வதேச பார்வையாளர்களின் ஈர்ப்பு அதன் பொருளாதாரத்தின் முக்கிய இயக்கியாக சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ளது.

இதற்கமைய விசா தேவைகளைத் தள்ளுபடி செய்வதற்கான முடிவு, அதிகமான சர்வதேச பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கு முன்னதாக, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் இந்தியர்களுக்கு இலவச உள்நுழைவு விசாவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திறைசேரி நிதி மோசடி: நாடாளுமன்றக் குழு கடமையிலிருந்து தவறிவிட்டது – ரஜித் கீர்த்தி தென்னக்கோன் காட்டம்!

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாயமான விவகாரத்தில், அரச நிதி தொடர்பான...

world 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி அகழ்வாய்வு: ஏழாம் நாளில் கைக்குழந்தை உட்பட 4 எலும்புக்கூடுகள் மீட்பு – மொத்த எண்ணிக்கை 250 ஆக உயர்வு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஏழாம் நாள் பணிகள்...

world 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி மூன்றாம் நபருக்கு மாற்றம்: சி.ஐ.டி வசம் சிக்கிய இலத்திரனியல் உபகரணங்கள்!

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, அங்கீகரிக்கப்படாத மூன்றாம் நபர் ஒருவரின் கைகளுக்குச்...

world 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எச்சரிக்கை: அதிக வெப்பத்துடன் பிற்பகலில் மழையும்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஒருபுறம் கடும் வெப்பமும், மறுபுறம் பிற்பகல் வேளைகளில் மழையும் என இருவேறுபட்ட...