meningitis
உலகம்செய்திகள்

காங்கோவில் மூளைக்காய்ச்சல் – 120க்கும் மேற்பட்டோர் சாவு

Share

ஆபிரிக்க நாடான  காங்கோவில் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் முதல் பரவிவரும் இந்த நோய் காரணமாக இதுவரை 120 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நோய் பரவலானது சூனியத்துடன் தொடர்புடையது என்று அந்த நாட்டு மக்கள் நம்புகின்றனர். மக்களிடம் காணப்படும் இந்த மூடநம்பிக்கை காரணமாக இந்த நோயைக் கட்டுப்படுத்துவது கடினம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோய்க்குரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்கு பதிலாக, ஓர் இடம் விட்டு வேறோர் இடத்துக்கு இடம்பெயர்ந்தால்
நோய் தங்களை பின்தொடராது என்ற நம்பிக்கையில் இடம்பெயர்கின்றனர்,

அபாயகரமான இந்த மூளைக்காய்ச்சல், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுவாசம் மற்றும் தொண்டை சளி வெளியே வந்து அதன் மூலம் நோய் பிறருக்கு பரவுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கோவின் வட கிழக்கு மாகாணமான ஷோபோ, மூளைக்காய்ச்சலின் மையமாக திகழ்கிறது.. இதனைக் கட்டுப்படுத்த காங்கோ அரசும் உலக சுகாதார அமைப்பும் ஷோபோவுக்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...

world 49
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பகல் நேர கடும் வெப்பத்தைத் தொடர்ந்து இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வரும் சூழலில், பிற்பகல் வேளைகளில்...

world 48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள், மின்சார விலைகளில் மாற்றம்? புதிய விலை சூத்திரத்தை அறிமுகம் செய்ய திட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், உள்நாட்டிலும்...

world 47
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2.2 பில்லியன் நிலக்கரி கொள்முதல் மோசடி: சட்டமா அதிபர் ஒப்புதலின்றி ஒப்பந்தம் கையெழுத்து!

டிரைடென்ட் கெம்பார் லிமிடெட் (Trident Kembar Ltd) நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்ததில் நிகழ்ந்துள்ள பாரிய...