உலகம்

அபாயம் மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

Share
7 21
Share

அபாயம் மிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில், அந்நகர கால்பந்து அணிக்கும்,இஸ்ரேல் அணி ஒன்றிற்கும் இடையில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது,இஸ்ரேல் கால்பந்து அணி ஆதரவாளர்களுக்கும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்நிலையில், வியாழனன்று, பிரான்சிலுள்ள Stade de France என்னும் விளையாட்டு மைதானத்தில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் அணிகள் மோத இருக்கின்றன.

அதனால், அங்கும் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ஆகவே, ஆயிரக்கணக்கான பொலிசார் விளையாட்டு நடைபெறும் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் குவிக்கப்பட இருக்கிறார்கள்.

இதற்கிடையில், மோதல் வெடிக்கக்கூடும் என்னும் அபாயம் நிலவும், பிரான்ஸ் இஸ்ரேல் அணிகள் விளையாடும் போட்டியைக் காண பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் செல்ல இருக்கிறார்.

அது குறித்து எலிசி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், எப்போதும்போல, பிரான்ஸ் அணிக்கு தனது முழு ஆதரவையும் தெரிவிக்கும் நோக்கில், பிரான்ஸ் ஜனாதிபதி அந்த போட்டியைக் காணச் செல்ல இருக்கிறார்.

அத்துடன், ஆம்ஸ்டர்டாமில் நிகழ்ந்த யூத வெறுப்பு சம்பவங்களுக்குப்பின், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையைக் காட்டுவதற்காகவும் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

5 8
உலகம்செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலை “தூண்டுதலில்லாததும், வெளிப்படையான போர் நடவடிக்கையும்” எனவும் பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது....

6 9
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு இந்தியாவின் பதிலடி! நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு...

7 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒன்பது இலக்குகள் மீது ஏவுகணைத்...