articles2FdXKIHGScLz93VYdXqDJg
செய்திகள்உலகம்

அகதியாகச் சென்று பாராளுமன்ற முதல்வராக உயர்வு: சுவிஸில் வரலாற்றுச் சாதனை படைத்த ஈழத்தமிழர் ஜெயக்குமார்!

Share

சுவிட்சர்லாந்தின் செங்காளன் (St. Gallen) நகரமன்றத்தின் தலைவராக (Stadtparlament-Präsident), ஈழத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சமூகநலச் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் நேற்று (20) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

1988 ஆம் ஆண்டு, தனது 18 ஆவது வயதில் கையில் ஒரு பையோ, கல்வியோ அல்லது எவ்வித ஆவணங்களோ இன்றி ஒரு அகதியாகச் சுவிட்சர்லாந்திற்குள் காலடி வைத்தார் ஜெயக்குமார்.

யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த இவர், கோண்டாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார். 2011 இல் சுவிஸ் குடியுரிமை பெற்ற இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பசுமைக் கட்சி (Green Party) சார்பில் நகரமன்ற உறுப்பினராகச் செயற்பட்டு வருகிறார்.

பாராளுமன்ற அவையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வு தமிழர் கலாச்சாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் அமைந்தது.

அவையில் திருக்குறளை மூன்று முறை முன்மொழிந்த ஜெயக்குமார், அதன் பொருளை டச் (Dutch) மொழியில் அங்கிருந்த உறுப்பினர்களுக்கு விளக்கினார்.அவையரங்கில் தமிழர் பண்பாட்டு இசை ஒலிக்கவிடப்பட்டதுடன், விருந்தினர்களுக்குத் தமிழ் பாரம்பரியச் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டமை அனைவரையும் கவர்ந்தது.

தற்போது 56 வயதாகும் ஜெயக்குமார், செங்காளன் நகரில் வசிக்கும் சுவிஸ் குடியுரிமை இல்லாத 30% மக்களுக்காகவும், இனப் பாகுபாட்டிற்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். “தன்னைப் போலவே எவ்வித ஆதாரமுமின்றி வரும் அகதிகளின் வாழ்வை மேம்படுத்துவதே தனது இலக்கு” என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஈழத்தமிழர் ஒருவர் ஐரோப்பிய நாடொன்றின் நகரமன்றத் தலைவராக உயர்ந்திருப்பது உலகவாழ் தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...