23 2 scaled
உலகம்செய்திகள்

நான் மருந்தை உட்கொண்டேன்., வெளிப்படையாக போட்டுடைத்த எலோன் மஸ்க்

Share

நான் மருந்தை உட்கொண்டேன்., வெளிப்படையாக போட்டுடைத்த எலோன் மஸ்க்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் (Elon Musk), மருந்து உட்கொள்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மீண்டும் பதிலளித்துள்ளார்.

எலோன் மஸ்க் சமீபத்தில் மருந்தை பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டார்.

மனஅழுத்தம் போன்ற பாதகமான சூழ்நிலைகளைச் சமாளிக்க மருத்துவரின் அறிவுறுத்தலின்படி கேட்டமைன் (ketamine) என்ற மருந்தை உட்கொண்டதாக அவர் கூறினார்.

டெஸ்லா நிறுவனத்தின் நிர்வாகத்தில் (It Helps Him In Running Tesla) மருந்துகளின் பயன்பாடு தனக்கு பயனுள்ளதாக இருந்ததை அவர் வெளிப்படுத்தினார்.

கடந்த காலங்களில் தனக்கு மன உளைச்சல் இருந்ததாகவும், அப்போது அதில் இருந்து வெளியேற கெட்டமைன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.

மருத்துவரின் ஆலோசனைப்படி வாரம் ஒருமுறை சிறிய அளவில் எடுத்துக்கொள்வதை அவர் வெளிப்படுத்தினார்.

நான் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்கிறேன். என் மீது நிறைய அழுத்தம் இருந்தது. நான் அதிக நேரம் மன அழுத்தத்தில் இருந்தால் டெஸ்லாவின் செயல்திறன் கடுமையாக பாதிக்கப்படும். அதை முறியடிக்க தான் கெட்டமைன் மருந்தை உட்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

யாராவது கெட்டமைன் மருந்தை அதிகமாக உட்கொண்டால், அவர்களால் எந்தப் பணியையும் சரியாக முடிக்க முடியாது என்று மஸ்க் கூறினார்.

எனினும், போதைப்பொருள் உட்கொண்டதை மஸ்க் ஒப்புக்கொள்வது இது இரண்டாவது முறையாகும். கடந்த காலத்திலும் இந்த தலைப்பில் பேசியிருக்கிறார்.

மஸ்க் அடிக்கடி சட்டவிரோத மருந்துகளை உட்கொண்டதாக குற்றம் சாட்டப்படுவது அறியப்படுகிறது. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பார்ட்டிகளில் மஸ்க் போதைப்பொருள் உட்கொள்வதாக ஒரு கட்டுரையை வெளியிட்டது.

இது மஸ்கின் உடல்நலம் மற்றும் அவரது வணிக சாம்ராஜ்ஜியத்தின் மீது கடுமையான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்று ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழ் வெளிப்படுத்தியது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...