10 36
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் மூக்கை நுழைக்கும் எலான் மஸ்க்: ஜேர்மானிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

Share

சர்வதேச அரசியலில் மூக்கை நுழைக்கும் எலான் மஸ்க்: ஜேர்மானிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதிலிருந்தே, உலக அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள ட்ரம்பின் நண்பரான கோடீஸ்வரர் எலான் மஸ்க், சர்வதேச அரசியலில் மூக்கை நுழைத்துவருகிறார்.

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை, ’ஏய் பெண்ணே, நீ இப்போது கனடாவின் ஆளுநர் அல்ல, நீ என்ன சொன்னாலும், அதற்கு இப்போது மதிப்பில்லை என்று கூறி கேலி செய்தார் எலான் மஸ்க்.

பிரித்தானியாவில் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என்று கூறி பிரித்தானிய அரசியலில் தலையிட்டார் எலான் மஸ்க்.

அடுத்ததாக, ஜேர்மனியைக் காப்பாற்ற AfD கட்சியால்தான் முடியும் என்றும், ஜேர்மன் சேன்ஸலரான ஷோல்ஸ் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும், அவர் திறமையில்லாத முட்டாள்’ என்று கூறி ஜேர்மன் அரசியலில் பரபரப்பை உருவாக்கினார் எலான் மஸ்க்.

இந்நிலையில், இப்படி எலான் மஸ்க் தேவையில்லாமல் சர்வதேச அரசியலில் மூக்கை நுழைப்பதைக் குறித்து ஜேர்மானிய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

YouGov என்னும் அமைப்பு மேற்கொண்ட அந்த ஆய்வில், எலான் மஸ்க் தேவையில்லாமல் சர்வதேச அரசியலில் மூக்கை நுழைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும், அவர் அப்படி கருத்து தெரிவிக்கும் எந்த நாட்டையும் குறித்தோ, அந்த நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்தோ அவருக்கு சரியாகத் தெரியாது என்றும் மக்கள் கருதுவது தெரியவந்துள்ளது.

ஜேர்மனியிலும் பிரித்தானியாவிலும் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், தங்கள் நாடுகள் எலான் மஸ்குடன் நல்ல உறவு வைத்துக்கொள்வது அவசியமற்ற ஒன்று என இரு நாட்டு மக்களிலும் 54 சதவிகிதம் பேர் கருதுவதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

எலான் மஸ்கை அலட்சியப்படுத்துவது நல்லது என 50 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளார்கள்.

ஜேர்மானியர்களில் ஆய்வில் பங்கேற்றவர்களில் 73 சதவிகிதம் பேரும், பிரித்தானியாவில் 69 சதவிகிதம் பேரும், எலான் மஸ்க் தங்கள் நாட்டு அரசியலில் தலையிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ளார்கள்.

சொல்லப்போனால், எலான் மஸ்க் அமெரிக்க அரசியலில் தலையிடுவதையே ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...