13 9
உலகம்செய்திகள்

கனடாவை தொடர்ந்து வம்புக்கிழுக்கும் அமெரிக்கா: அதிகரிக்கும் வார்த்தை மோதல்கள்

Share

கனடாவை தொடர்ந்து வம்புக்கிழுக்கும் அமெரிக்கா: அதிகரிக்கும் வார்த்தை மோதல்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்தே, ட்ரம்ப் தொடர்ந்து கனடாவை வம்புக்கு இழுத்துவருகிறார்.

அவருடன், உலக அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள கோடீஸ்வரர் எலான் மஸ்கும் தன் பங்குக்கு கனடாவையும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவையும் கேலி செய்துவருகிறார்.

ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கூறியதுடன், ட்ரூடோவை கனடாவின் ஆளுநர் என கேலி செய்திருந்தார்.

பின்னர், கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கப்போவதாக மிரட்டியிருந்தார். அதைத்தொடர்ந்து கனடாவும் அமெரிக்காவும் இனைந்து ஒரே அமெரிக்காவாக ஆகியுள்ளதுபோல் காட்டும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார் ட்ரம்ப்.

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது ஒருபோதும் நடக்காது என்று கூறியிருந்தார் ட்ரூடோ. கனடா அரசியல்வாதிகளும் சமூக ஊடகங்களில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

இந்நிலையில், ட்ரூடோ ராஜினாமா செய்துவிட்டதை சுட்டிக்காட்டும் வகையில், மீண்டும் ட்ரூடோவை கேலி செய்துள்ள எலான் மஸ்க், ’ஏய் பெண்ணே, நீ இப்போது கனடாவின் ஆளுநர் அல்ல, நீ என்ன சொன்னாலும், அதற்கு இப்போது மதிப்பில்லை என்று கூறியுள்ளார்.

ஆகமொத்தத்தில், அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்துவருகின்றன.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...