1600 லிட்டர் தாய்ப்பால் தானம்!! உதவிய சாதனை பெண்
உலகம்செய்திகள்

1600 லிட்டர் தாய்ப்பால் தானம்!! உதவிய சாதனை பெண்

Share

1600 லிட்டர் தாய்ப்பால் தானம்!! உதவிய சாதனை பெண்

குறைமாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கி அமெரிக்காவை சேர்ந்த தாய் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள அலோஹா பகுதியை சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன்-சியரா(Elisabeth Anderson-Sierra) என்ற தாய் ஒருவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தன் தாய்ப்பால் மூலம் ஊட்டம் வழங்கி வருகிறார்.

அத்துடன் குறைமாத குழந்தைகள் பலருக்கு தன்னுடைய தாய்ப்பாலை தானமாக வழங்கி உதவி வருகிறது. எலிசபெத் ஆண்டர்சன்-சியரா தாய்ப்பால்(breastmilk) வங்கிக்கு 20 பிப்ரவரி 2015 முதல் 20 ஜூன் 2018 வரையிலான காலத்திற்குள் 1.599.68 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார்.

Elisabeth Anderson-Sierra donate 1600 ltr breastmilk: 1600 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கி கின்னஸ் சாதனை: பலரின் இயலாமையை உடைத்தெறிந்து உதவிய பெண்guinnessworldrecords.com

இது தனிநபர் ஒருவரால் வழங்கப்பட்ட மிகப்பெரிய தாய்ப்பால் கொடையாகும். இந்த சாதனைக்காக எலிசபெத்திற்கு கின்னஸ் சாதனையாளர் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 வருடங்களில் எலிசபெத், உள்ளூர் குடும்பங்கள் மற்றும் உலக அளவிலான பெறுநர்கள் என பலருக்கு இதுவரை 350,000 அவுன்ஸ்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார்.

மேலும் தாய்ப்பால் வங்கிக்கு 2015ம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தான் வழங்கிய தாய்ப்பால் அளவு மட்டுமே இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என எலிசபெத் குறிப்பிட்டுள்ளார்.

பால் சுரக்காதவர்கள் என அடையாளம் சூட்டப்பட்ட பல பெறுநர்களுக்கு எலிசபெத் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார். இவ்வாறு அடையாளம் சூட்டப்பட்ட பல்வேறு பெறுநர்களின் கதைகளில் மாற்றம் ஏற்படுத்துவதே என்னுடைய எல்லாம் ஆன எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.

எலிசபெத் ஆண்டர்சன்-சியரா ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம்(hyperlactation syndrome) என்ற பாதிப்பு உள்ளது, இந்த பாதிப்பு காரணமாக அவருக்கு பால் உற்பத்தி அதிகரித்து தாய்ப்பால் வழிதல் ஏற்படும்.

இது தொடர்பாக எலிசபெத் பேசிய போது, என்னுடைய உடல் அதிகப்படியான ப்ரோலாக்டின் என்னும் ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்யும், இதுவே என்னுடைய அதிகமான தாய்ப்பால் சுரக்க செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தாய்ப்பாலை உறிஞ்சி எடுக்க உதவும் இயந்திரமும் என்னுடைய இந்த பணியில் முக்கிய பங்கு வகித்ததாக எலிசபெத் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...