tamilni 156 scaled
உலகம்செய்திகள்

லொட்டரி மூலம் ரூ.200 கோடியை அள்ளிய வயதான தம்பதி.., கணிதத்தை பயன்படுத்தி புத்திசாலித்தனம்

Share

லொட்டரியில் இருக்கும் கணிதத்தை பயன்படுத்தி ரூ.200 கோடியை வயதான தம்பதியினர் வென்றுள்ளனர்.

அமெரிக்கா, மெக்சிகோ யவார்டை சேர்ந்த தம்பதியினர் ஜெர்ரி (80) மற்றும் மார்ஜ் செல்பி (81). இவர்கள் அங்குள்ள ஒரு கடையில் வேலை செய்து 60 வயதில் ஓய்வு பெற்றனர்.

இதில் மனைவி செல்பி 2003 -ம் ஆண்டு ‘வின்ஃபால்’ (Winfall) என்ற புதிய லொட்டரி சீட்டு விற்பனையை பார்த்துள்ளார். அதில் எப்படியாவது நாம் ஜாக்பாட்டை அடிக்க வேண்டும் என்றும் அவர் நினைத்துள்ளார்.

சிறு வயதில் இருந்தே கணிதத்தில் செல்பி சிறந்து விளங்கியுள்ளார். இதனால் அவரது கணிதத்தை பயன்படுத்தி லொட்டரியில் வெற்றி எண்ணை கணக்கிட்டு எப்படி பரிசு தொகை வழங்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்தார்.

பின்னர், மொத்தம் 1,100 டொலர்களை வைத்து 1900 டொலர்களை வெல்ல முடியும் என்பதை செல்பி உறுதிப்படுத்தினார்.

அதன்படி, முதன்முதலில் 3,600 டொலர்களுக்கு லொட்டரி டிக்கெட்டுகள் வாங்கி 6,300 டொலர்கள் வென்றார். அதே போல மீண்டும் 8,000 டொலர்களுக்கு லொட்டரி டிக்கெட்டுகள் வாங்கி 16,000 டொலர்கள் வென்றார்.

இந்த தம்பதியினர் இதோடு நிறுத்திக் கொள்ளாமல் கடந்த 9 ஆண்டுகளில் லொட்டரி மூலம் 26 மில்லியன் டொலர்கள் வென்றுள்ளனர். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.200 கோடியாகும். அதாவது, இவர்களின் புத்திசாலித்தனத்தால் தற்போது கோடீஸ்வரர்களாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தம்பதி தொடர்ந்து வெல்வது இன்ஸ்பெக்டர் ஜெனரலின் விசாரணைக்கு வழிவகுத்தது. விசாரணையின் முடிவில் விதிகளை அவர்கள் முறையாகப் பின்பற்றியது உறுதியானதால் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், இந்த தம்பதியினரின் கதையை வைத்து ‘ஜெர்ரி அண்ட் மார்ஜ் கோ லார்ஜ்’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...