tamilnaadi 87 scaled
உலகம்செய்திகள்

காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் எழுப்பும் எகிப்து

Share

காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் எழுப்பும் எகிப்து

காசாவில் இருந்து தப்பி செல்லும் அகதிகளை தடுப்பதற்காக ரபா நகருக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இதுகுறித்து எகிப்து அரசாங்கம் தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இஸ்ரேல்-காசா இடையேயான போர் கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமானது. 4 மாதங்களுக்கும் மேலாக தொடரும் இந்த போரில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியானதாக அறிக்கைகள் மூலம் கூறப்படுகிறது.

இதனால் உயிருக்கு பயந்து ஏராளமானோர் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அதன்படி இலட்சக்கணக்கானோர் எகிப்து எல்லை நகரமான ரபாவில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் ரபா நகருக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருகிறது.

இது காசாவில் இருந்து தப்பி செல்லும் அகதிகளை தடுப்பதற்காக இந்த சுவர் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காசாவின் மேற்கு எல்லையில் ஷேக் ஜூவைத் – ராபா நகரங்களை இணைக்கும் சாலையையொட்டி 3.5 கிலோமீற்றர் தொலைவுக்கு சுவர் கட்டுமானம் நடைபெற்று வருகின்ற செயற்கை கோள் படங்களை மேக்ஸர் டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...

24112021 capsized ferry reuters
செய்திகள்இலங்கை

கிண்ணியா புதிய படகுப் பாதை தொடக்க விழாவில் விபத்து: கடலில் கவிழ்ந்த பொக்லைன் இயந்திரம்!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு இடையேயான புதிய படகுப் பாதை சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போது...

25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...