tamilnaadi 87 scaled
உலகம்செய்திகள்

காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் எழுப்பும் எகிப்து

Share

காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் எழுப்பும் எகிப்து

காசாவில் இருந்து தப்பி செல்லும் அகதிகளை தடுப்பதற்காக ரபா நகருக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இதுகுறித்து எகிப்து அரசாங்கம் தரப்பில் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இஸ்ரேல்-காசா இடையேயான போர் கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பமானது. 4 மாதங்களுக்கும் மேலாக தொடரும் இந்த போரில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியானதாக அறிக்கைகள் மூலம் கூறப்படுகிறது.

இதனால் உயிருக்கு பயந்து ஏராளமானோர் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அதன்படி இலட்சக்கணக்கானோர் எகிப்து எல்லை நகரமான ரபாவில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் ரபா நகருக்கு அருகில் இராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருகிறது.

இது காசாவில் இருந்து தப்பி செல்லும் அகதிகளை தடுப்பதற்காக இந்த சுவர் கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காசாவின் மேற்கு எல்லையில் ஷேக் ஜூவைத் – ராபா நகரங்களை இணைக்கும் சாலையையொட்டி 3.5 கிலோமீற்றர் தொலைவுக்கு சுவர் கட்டுமானம் நடைபெற்று வருகின்ற செயற்கை கோள் படங்களை மேக்ஸர் டெக்னாலஜீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 68fc59844d405
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி வழக்கில் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவிய நபர்கள்...

23 641447ac26c1d
செய்திகள்இலங்கை

கடற்றொழிலாளர்களுக்கு உயர் தர எரிபொருள்: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன், அவர்களுக்கு உயர் தரத்திலான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்கும் புதிய வேலைத்திட்டத்தை...

1758774194 24 664f1eee56854
செய்திகள்

இலங்கை சுற்றுலாத் துறை எழுச்சி: ஒக்டோபரில் 21.8% வளர்ச்சி! – இந்தியாவிலிருந்து அதிகப் பயணிகள் வருகை

இலங்கையின் சுற்றுலாத் துறை ஒக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த மாதத்தின் முதல் 26...