பலரையும் திரும்பி பார்க்க வைத்த ஈழத் தமிழ் இளைஞன்
சுவிட்சர்லாந்தில் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவரின் செயல் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் தொழிற்கல்வியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் சான்றிதழ் பெறும் போது ஈழத் தமிழ் இளைஞர் தமிழர் பண்பாட்டு உடையுடன் சென்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கவிதரன் என்ற தமிழ் இளைஞர் வேட்டி சட்டை அணிந்து சான்றிதழ் பெறும் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
இது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் தமிழையும், தமிழர் பண்பாட்டையும் தமிழர் விரும்பினால் எவரும் தடுப்பதில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் திகழ்வதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்