24 664af5c82847e
உலகம்செய்திகள்

இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவால் அதிர்ச்சியடைந்தேன் – மோடி

Share

இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவால் அதிர்ச்சியடைந்தேன் – மோடி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸியின் இறப்பு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நாடுகளின் தலைவர்களும் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், ”ஈரான் ஜனாதிபதி டாக்டர்.செயத் இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுக்கூறப்படும் . அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...