tamilni 272 scaled
உலகம்செய்திகள்

பரபரப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

Share

பரபரப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

டுபாய் சர்வதேச விமான நிலையமானது ஆசிய – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான மற்றும் சிறந்த சேவையை வழங்கும் விமான நிலையமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஆசியா – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, டுபாய் விமான நிலையம் பிராந்தியத்தில் உள்ள மற்றைய விமான நிலையங்களை விடவும் சிறந்த சேவையை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, டுபாய் விமான நிலையமானது இவ்வாண்டின் முதல் பாதியில் 41.6 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

இது கடந்த 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை விட சற்று அதிகமாகும் எனவும், டுபாய் விமான நிலையம் இவ்வாண்டின் முதல் பாதியில் மொத்தம் 201,800 விமானங்களைக் கையாண்டள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கடந்த 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13 வீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் விமான நிலையமானது 104 நாடுகளில் 255 க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் 90 க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் கைதான 5 இலங்கையர்கள் 30 நாட்கள் தடுப்புக் காவலில்: நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

9867DD57 36F5 4D0B B0C9 6373354B6CAA
செய்திகள்அரசியல்இலங்கை

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராயும் குழு: பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) இரத்து செய்வது தொடர்பான பரிந்துரைகள்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...