tamilni 272 scaled
உலகம்செய்திகள்

பரபரப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

Share

பரபரப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

டுபாய் சர்வதேச விமான நிலையமானது ஆசிய – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான மற்றும் சிறந்த சேவையை வழங்கும் விமான நிலையமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஆசியா – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, டுபாய் விமான நிலையம் பிராந்தியத்தில் உள்ள மற்றைய விமான நிலையங்களை விடவும் சிறந்த சேவையை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, டுபாய் விமான நிலையமானது இவ்வாண்டின் முதல் பாதியில் 41.6 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

இது கடந்த 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை விட சற்று அதிகமாகும் எனவும், டுபாய் விமான நிலையம் இவ்வாண்டின் முதல் பாதியில் மொத்தம் 201,800 விமானங்களைக் கையாண்டள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கடந்த 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13 வீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் விமான நிலையமானது 104 நாடுகளில் 255 க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் 90 க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...