tamilni 272 scaled
உலகம்செய்திகள்

பரபரப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

Share

பரபரப்பான விமான நிலையமாக டுபாய் சர்வதேச விமான நிலையம்

டுபாய் சர்வதேச விமான நிலையமானது ஆசிய – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான மற்றும் சிறந்த சேவையை வழங்கும் விமான நிலையமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலைய கவுன்சில் ஆசியா – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, டுபாய் விமான நிலையம் பிராந்தியத்தில் உள்ள மற்றைய விமான நிலையங்களை விடவும் சிறந்த சேவையை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, டுபாய் விமான நிலையமானது இவ்வாண்டின் முதல் பாதியில் 41.6 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளதாக பதிவாகியுள்ளது.

இது கடந்த 2019 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை விட சற்று அதிகமாகும் எனவும், டுபாய் விமான நிலையம் இவ்வாண்டின் முதல் பாதியில் மொத்தம் 201,800 விமானங்களைக் கையாண்டள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கடந்த 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 13 வீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் விமான நிலையமானது 104 நாடுகளில் 255 க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் 90 க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...