a35b682847fb31526013b4e7faff71541703334010363572 original
உலகம்செய்திகள்

இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

Share

இந்திய பெருங்கடலில் வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

ட்ரோன் தாக்குதல் மூலம் இந்தியப் பெருங்கடலில் இன்று (23.12.2023) வணிகக் கப்பலொன்று சேதமடைந்துள்ளது.

குஜராத் கடற்கரையில் இடம்பெற்றுள்ள இந்த உரிமை கோரப்படாத தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய இராணுவத்தின் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே கூறியுள்ளது.

மேலும் இந்த கப்பல் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில்  உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என இரண்டு கடல்சார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கப்பலில் சில கட்டமைப்பு சேதங்கள் பதிவாகியுள்ளதோடு முன்னதாக இந்த கப்பல் சவூதி அரேபியாவுக்கு சென்ற நிலையில் இந்திய துறைமுகத்திற்கு அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பில் இந்திய கடற்படை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...