உலகம்செய்திகள்

சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை கொடுத்த இந்திய உணவகம்: கடும் அபராதம்

Share
5 20 scaled
Share

சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை கொடுத்த இந்திய உணவகம்: கடும் அபராதம்

பிரித்தானியாவில், சட்ட விரோத புலம்பெயர்ந்தோருக்கு வேலை கொடுத்த இந்திய உணவகம் ஒன்றிற்கு புலம்பெயர்தல் அதிகாரிகள் பெருந்தொகை ஒன்றை அபராதமாக விதித்துள்ளார்கள்.

நேற்று முன் தினம், இங்கிலாந்தின் பிரிஸ்டலுக்கு அருகிலுள்ள Nailsea என்னுமிடத்தில் அமைந்துள்ள Posh Spice என்னும் இந்திய உணவகத்தில் புலம்பெயர்தல் அதிகாரிகள் ரெய்டு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புலம்பெயர்தல் அதிகாரிகளைக் கண்டதும் சட்டென தாங்கள் அணிந்திருந்த ஏப்ரன்களை கழற்றிவிட்டு அங்கிருந்து பின்வழியாக வெளியேற முயன்றுள்ளார்கள் சிலர்.

அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின் பக்க வாசலில் சிலரை நிறுத்திவைத்திருக்க, வெளியேற முயன்றவர்கள் அவர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார்கள்.

அவர்களில் இருவர் சட்டவிரோதமாக பிரித்தானியாவில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளதால், அவர்கள் இருவரும் நாடுகடத்தப்படும் வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த 15 மாதங்களில் இந்த உணவகத்தில் ரெய்டு நடத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். முதல் முறை ரெய்டின்போது, உணவக உரிமையாளருக்கு 40,000 பவுண்டுகளும், இரண்டாவது முறை 60,000 பவுண்டுகளும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் மீண்டும் சட்ட விரோத புலம்பெயர்ந்தோரை பணிக்கு வைத்து சிக்கியுள்ளதால், மீண்டும் அவர் அபராதம் செலுத்தவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையில், உணவகத்துக்கு சாப்பிட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள். நீதிமன்ற நடவடிக்கைகள் துவங்கியுள்ள நிலையில், 24 மணி நேரத்துக்கு உணவகம் இயங்காது என அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்கள்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...