tamilni 196 scaled
உலகம்செய்திகள்

விளாடிமிர் புடின் கூறும் எதையும் நம்பாதீர்கள்! வெள்ளை மாளிகை

Share

விளாடிமிர் புடின் கூறும் எதையும் நம்பாதீர்கள்! வெள்ளை மாளிகை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சொல்வதை நம்ப வேண்டாம் என அமெரிக்கர்களிடம் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன், உக்ரேனுக்கு அமெரிக்க இராணுவ உதவியை எதிர்த்து குரல் கொடுத்தவர் ஆவார்.

இவர், இந்த வார தொடக்கத்தில் கிரெம்ளினை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புடினை நேர்காணல் செய்யப்போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி (john kirby) செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ”அந்த நேர்காணலைப் பார்க்கும் (புடின் – கார்ல்சன் நேர்காணல்) எவரும் விளாடிமிர் புடின் கூறும் எதையும் நம்பக் கூடாது.

அமெரிக்க மக்களுக்கு இங்கு யார் தவறு என்று நன்றாக தெரியும். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, படையெடுப்பிற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன்.

யாருக்கும் அச்சுத்தல் தராத அண்டை நாடான உக்ரைனை அவர் ஆக்கிரமித்தார். உக்ரைன் எதற்காக போராடுகிறது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...