உரையைத் திரித்துக் கூறியதாகக் கூறி பி.பி.சி. மீது டொனால்ட் ட்ரம்ப் $10 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழக்கு!

23e066c0 1037 11f0 b0e1 2dd5aff43736.jpg

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டிஷ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் (BBC) மீது 10 பில்லியன் அமெரிக்க டாலர் (10 Billion USD) நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ட்ரம்ப் 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி ஆற்றிய உரையை பி.பி.சி. செய்தி நிறுவனம் “திரித்து தவறாக வெளியிட்டதாக” அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பி.பி.சி. செய்தி நிறுவனம் இந்த உரையின் உள்ளடக்கத்தைத் திரித்து, பொதுமக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தியதாக ட்ரம்ப் புகார் அளித்துள்ளார். ட்ரம்ப் அளித்த இந்தப் புகார், பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான பணிப்பாளர் டிம் டேவி (Tim Davie) மற்றும் செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டேர்னஸ் (Deborah Turness) ஆகியோர் இராஜிநாமா செய்ய வழிவகுத்தது.

இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் தற்போது பி.பி.சி. நிறுவனம் மீது 10 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஊடகங்கள் ஒரு அரசியல் தலைவரின் பேச்சைத் திரித்துக் கூறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இவ்வளவு பெரிய தொகைக்கு வழக்குத் தொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.

Exit mobile version