5 31
உலகம்செய்திகள்

உலகையே நடுங்க வைக்கும் ட்ரம்பை வாயை மூடச் சொன்ன நபர்: அவர் யார் தெரியுமா?

Share

உலகையே நடுங்க வைக்கும் ட்ரம்பை வாயை மூடச் சொன்ன நபர்: அவர் யார் தெரியுமா?

உலகையே நடுங்கவைக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பையே ஒருவர் வாயை மூடச் சொன்னதாக சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவிக்கொண்டிருக்கிறது.

அப்படி ட்ரம்பையே வாயை மூடச் சொன்ன அந்த நபர் யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை, ட்ரம்பின் புதிய நண்பரான எலான் மஸ்கின் நான்கு வயது மகன்தான் அந்த தைரியசாலி.

ஆம், ட்ரம்ப் எலான் மஸ்கின் மகனை உயர்ந்த IQ கொண்ட அருமையான நபர் என புகழ்ந்துகொண்டிருக்க, அந்தச் சிறுவனோ அவரை வாயை மூடச் சொன்னதாக சமூக ஊடகங்களில் மக்கள் தெரிவித்துவருகிறார்கள்.

நிகழ்ச்சி ஒன்றில் எலான் மஸ்க் பேசிக்கொண்டிருக்க, ட்ரம்ப் அதை கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அப்போது ட்ரம்பின் அருகே நின்றுகொண்டிருந்த எலான் மஸ்கின் மகன், ட்ரம்பைப் பார்த்து, வாயை மூடுங்கள் (I want you to shush your mouth) என்று கூறுவதாக சமூக ஊடகமான எக்ஸில் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், அந்தப் பையன் ட்ரம்பைப் பார்த்து கெட்டவார்த்தை ஒன்றைக் கூறியதாகவும், நீங்கள் உண்மையான ஜனாதிபதி அல்ல, நீங்கள் இங்கிருந்து போய்விடுங்கள் என்று கூறியதாகவும் இணையவாசிகள் கூறுகிறார்கள்.

அந்தப் பையன் சொன்னது பிடிக்காமல், முகத்தைச் சுழித்த ட்ரம்ப், முகத்தை திருப்பிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...