tamil nadu government monthly allowance
உலகம்செய்திகள்

2 -வது மாத மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 எந்த நாள் வரும் தெரியுமா? முதலமைச்சர் வெளியிட்ட தகவல்

Share

2 -வது மாத மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 எந்த நாள் வரும் தெரியுமா? முதலமைச்சர் வெளியிட்ட தகவல்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களுக்கு எப்போது மகளிர் உரிமைத்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

அந்தவகையில், இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.

பின்பு, செப்டம்பர் 15 ஆம் திகதி, மாதம் ரூ.1,000 வங்கிக்கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள்: அடையாளம் காண முடியாமல் குழம்பும் ஆசிரியர்கள்

இதற்கிடையே, குதியுள்ள மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு வரும் அக்டோபர் 14 -ம் தேதியே அவர்களுடைய வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதாவது, அக்டோபர் 15 -ம் திகதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஒரு நாள் முன்கூட்டியே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும்.

 

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...