12 7
உலகம்செய்திகள்

ஆண்டுக்கு ரூ. 3000 கோடிக்கு மேல் வருமானம்.., இந்தியாவின் பணக்கார ரயில் நிலையம் எது?

Share

ஆண்டுக்கு ரூ. 3000 கோடிக்கு மேல் வருமானம்.., இந்தியாவின் பணக்கார ரயில் நிலையம் எது?

பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் நோக்கத்தில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது.

ரயில்வே டிக்கெட்டுகளுக்காக ஆண்டுதோறும் மானிய தொகை பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வழங்கப்படுகிறது.

இதனால் ரயில் பயணிகள் குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணத்தை பெற்று வருகிறார்கள்.

மொத்தம் 7300 க்கும் அதிகமான ரயில் நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. நாள் ஒன்றுக்கு 13000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நாள்தோறும் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் இந்த ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள்.

ரயில் டிக்கெட்டுகளை தவிர்த்து பிளாட்பார்ம் டிக்கெட், விளம்பரங்கள், ரயில் நிலையங்களில் வைக்கப்படும் கடைகள், காத்திருப்பு அறைகள், பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் அறைகள் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் ரயில் நிலையங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.

அந்தவகையில் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட ரயில் நிலையமாக புதுடெல்லி ரயில் நிலையம் உள்ளது.

இங்கு ஆண்டு ஒன்றுக்கு 3300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023 – 24 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

மேலும் புதுடெல்லி ரயில் நிலையம் அதிகமான பயணிகளை கையாளக்கூடிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு சுமார் 4 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...