New Project 2024 01 19T145548.212 1
உலகம்செய்திகள்

தலைமறைவாக இருந்த திமுக MLA -வின் மகன், மருமகள் கைது.., பணிப்பெண் தாக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை

Share

தலைமறைவாக இருந்த திமுக MLA -வின் மகன், மருமகள் கைது.., பணிப்பெண் தாக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை

பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏவாக இருப்பவர் கருணாநிதி. இவருடைய மகன் ஆண்ட்ரோ வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த பெண்ணை ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினாவும் சேர்ந்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவனத்துக்கு செல்லவே அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர், தமிழ்நாடு முழுவதும் இந்த செய்தி பரவிய நிலையில், தாக்கப்பட்டதாக கூறிய இளம்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினார்.

அப்போது அந்த பெண், “அவர்கள் கொடூரமாக தாக்கியதாகவும், சிகரெட்டால் சூடு வைத்ததாகவும், மிளகாய் தூள் கலந்த தண்ணீரை குடிக்க செய்ததாகவும்” குற்றம் சாட்டினார். பின்னர், திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஆண்ட்ரோ மற்றும் மெர்லினா தலைமறைவாகினர்.

இதன்பின்னர், இருவரையும் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இன்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆண்ட்ரோ மற்றும் மெர்லினா ஆகியோரை தனிப்படை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...