2 9 scaled
உலகம்செய்திகள்

தோனியின் வெளியுலகம் அறிந்திராத தொழில் முயற்சிகள்! வெளியான சொத்து மதிப்பு

Share

தோனியின் வெளியுலகம் அறிந்திராத தொழில் முயற்சிகள்! வெளியான சொத்து மதிப்பு

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான எம்.எஸ் தோனி விளையாட்டு தொடர்பான பல தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும், பரவலாக அறியப்படாத இன்னும் சில முதன்மை தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும் தற்போதைய சி.எஸ்.கே அணித் தலைவருமான மகேந்திர சிங் தோனி கோடீஸ்வர இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1040 கோடிக்கும் அதிகம். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மட்டும் தனது மொத்த வருவாய்க்கும் காரணமாக அமையவில்லை. மாறாக பல்வேறு தொழில் முயற்சிகள், முதலீடுகள் ஆகியவையால் வாயைப்பிளக்கவைக்கும் இந்த சொத்துக்களை திரட்டியுள்ளார்.

தோனிக்கு சொந்தமாக ஆயத்த ஆடை பிராண்ட் ஒன்றும் உள்ளது. விளையாட்டு தொடர்பான நிறுவனம் ஒன்றையும் முன்னெடுத்து வருகிறார். நாட்டின் முதன்மையான நிறுவனங்களுக்கு விளம்பரதாரராகவும் செயல்பட்டு வருகிறார்.

அத்துடன், பரவலாக அறியப்படாத தொழில் முதலீடுகளையும் அவர் முன்னெடுக்கிறார். ராஞ்சி நகரில் அவருக்கு ஹொட்டல் ஒன்று உள்ளது. பெங்களூருவில் சர்வதேச தரத்தில் ஒரு பாடசாலையில் செயல்பட்டு வருகிறது.

தோனிக்கு சொந்தமாக சாக்லேட் நிறுவனம் ஒன்றும் இயங்கி வருகிறது. ஹொட்டல் மஹி ரெசிடென்சி என்ற பெயரில் சில வருடங்களுக்கு முன்பு ராஞ்சியில் உணவம் ஒன்றை திறந்துள்ளார்.

பெங்களூருவில் செயல்பட்டுவரும் தோனியின் பாடசாலைக்கு சத்யா நாதெல்லாவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் மாணவர்களுக்கு மாறுபட்ட மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த பாடத்திட்டத்தை வழங்குகிறது.

7Ink என்ற பெயரில் குளிர்பான நிறுவனம் ஒன்றும், Copter 7 என்ற பெயரில் சாக்லேட் நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. மட்டுமின்றி, தோனி Sportsfit என்ற பெயரில் இந்தியாவின் 200 பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்களையும் அவர் செயல்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் தமிழ் திரைப்படம் மொன்றையும் தயாரித்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...